Thursday 11 December 2008

சொன்னாங்க..சொன்னாங்க

தமிழகத்தில் உள்ள உட்கட்சி அரசியல் எனக்குப் பிடிக்கவில்லை. நானொரு கலைஞன். அந்தக் கோட்டாவிலேயே எம்.பி.,யாக ஆசைப்படுகிறேன்.
-எஸ்.வி.சேகர்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம் எனக் கூறி வருகின்றனர். ஆனால், விவசாயிகள் வளைந்து வளைந்து, நடக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டனர்.
-ராமதாஸ்

உலக நாடுகள் எல்லாம் பொருளாதாரத்தில் வீழச்சி அடைந்துவரும் நிலையில், இந்தியா மட்டும் வீழ்ச்சி அடையாமல் இருப்பதற்கு மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை தான் காரணம்.
-தங்கபாலு

விடுதலைக்காகவும், மீட்சிக்காகவும் போராடும் புலிகளிடம் பணம் பெறுவது, ஈனத் தொழில் செய்து பிழைப்பதற்குச் சமம்.
-வைகோ

ராஜிவ் படுகொலை நாட்டிற் குப் பேரிழப்பு என்பதை மறுக்கவில்லை. ஆனால், பழைய ஒப்பாரியை தங்கபாலு போன்ற வர்கள் பாடிக்கொண்டிருந்தால், தமிழகத்தில் அது பலனளிக்காது.
-விஜய டி.ராஜேந்தர்