Saturday 22 January 2011

கலை வளர்த்த கலைஞர்கள்(இசைவேளாளர்கள்


திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை

பிறப்பு

தாந்சைமாவட்டம்தாந்சைமாவட்டத்தை சேர்ந்த மாயவரம் தாலுக்காவில் உள்ள சிறிய கிராமம் திருவாளப்புத்தூர் இந்த கிராமத்தில் இசைவேளாளர் சமுகத்தை சேர்ந்த பிரபல நாட்டிய தாரகை திருவாளப்புத்தூர் கல்யாணி அம்மாள் கல்யாணி அம்மாளுக்கு மூத்த மகனாக பிறந்தவர் சுவாமிநாதபிள்ளை. இவருக்கு ஓரு சகோதரனும் இரண்டு சகோதரிகளும் உண்டு. சகோதரன் திருவாளப்புத்தூர் கிரூஷ்ணமூர்த்திபிள்ளை சிறந்த வித்துவான்; சகோதரிகள் ராஜலெட்சுமி,ஜிவரெத்தினம், இருவரும் மேடை நடனக்கலைஞர்கள்.

வாழ்க்கை

பள்ளிப்படிப்பில் ஆர்வம் இல்லாமையால், அதனை விட்டு விட்டு நடனக்கலையை பிரபலமன நடன ஆசிரியர் பந்தநநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் குருகுலவாசமாக சுமார் 12 வருடங்கள் பயின்றார். நாட்டியத்தில் சிறந்த சிம்ம நந்தனம் சிம்ம நந்தனம் என்ற கலையை பந்தநநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் முறையாகப் பயின்றவர். அவருடன் இணைந்து பல நாட்டிய நிகழ்சிகளையும், பலருக்கு நாட்டியமும் பயிற்றுவித்தார். பின்னர் சென்னை சென்று வழுவூர் ராமையாபிள்ளையும் இவரும் இணைந்து பல மாணவர்களை உருவாக்கினர்.



குடும்பம்

சுவாமிநாதபிள்ளை பிரபல நடன ஆசிரியர் பொண்ணுசாமிநட்டுவனார் மகள் ஞாணாம்பாளை மணந்தார் சுவாமிநாதபிள்ளைக்கு டி. எஸ். ராமலிங்கம் என்ற ஒரே மகன் உள்ளார். அவர் ஒரு . தியாகி தியாகிகளுக்கான சலுகைகளைப் பெற மறுத்தவர். மூன்று முறை கும்பகோணத்தில் தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினராக இருந்தவர். சுவாமிநாதபிள்ளை, வழுவூர் ராமையாபிள்ளையின் தம்பி நடராஜசுந்தம்பிள்ளை நடராஜசுந்தம்பிள்ளையின் இவரும் ஓரு சிறந்த மிருதங்க வித்துவான் மகள் விஜயலெட்சுமியை தன் மகன் ராமலிங்கத்துக்கு மணம் முடித்தார். பின்பு இவர் தனியாக சென்னையிலேயே தங்கி நாட்டியப் பணியில் ஈடுபட்டார்.


சமிநாதபிள்ளை மகன் டி.எஸ்.ராமலிங்கம்.

உருவாக்கிய மாணவ, மாணவிகள்

இவர் பல மாணவர்களையும் மாணவிகளையும் உருவாக்கினார் பிரபலமான வழூவூர் சாம்ராஜன் சிலகாலம் இவருடைய மாணாக்கராக இருந்தவர். இவர் எல். விஜயலெட்சுமி, நடிகைகள்.ஹேமாமாலினி, நிர்மலா விஸ்வநாதன். போன்றவர்கள் இவருடைய மாணவிகள் ஆவர்.



பட்டங்களும் விருதுகளும்

சுவாமிநாதபிள்ளை தமிழக அரசின்கலைமாமணி பட்டத்தை முதல்வராக இருந்த போது பெற்றார். பின்னர் இந்திய அரசின் தேசிய விருதை அன்றைய குடியரசுத் தலைவர் வி. வி. கிரி">வி. வி. கிரி இடம் இருந்து பெற்றார்.பாண்டிச்சேரியில் உள்ள ஜின்னாசூட் இன்ஸ்சூட்டில் பரதகலா கேசரி என்ற பட்டம் வழங்கப்பட்டது

மறைவு

சுவாமிநாதபிள்ளை மார்ச் 13, 1972ல் ஆண்டு இயற்கை எய்தினார்.


பரதநாட்டியக் கலைஞர்கள் | 1972 இறப்புகள்





























No comments: