Saturday 22 January 2011

கலை வளர்த்த கலைஞர்கள் (இசைவேளாளர்கள்)




நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை





நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை (1910-1964) ஒரு தமிழ்நாட்டு தவில் கலைஞர்.
பொருளடக்கம்


* 1 பிறப்பு
* 2 பெயர் காரணம்
* 3 குடும்பம்
* 4 இவருடன் வாசித்த நாதசுரகலைஞர்கள்
* 5 இவரிடம் பயின்ற மாணவர்கள்
* 6 இவர் பெற்ற பட்டங்கள்
* 7 இவரை பற்றி மற்றவர்கள்
* 8 மறைவு
* 9 நூற்றாண்டு விழா

பிறப்பு

தஞ்சைமாவட்டத்தை சேர்ந்த கும்பகோணம் அருகில் உள்ள கிராமம் நாச்சியார்கோவிலில் பாரம்பரிய இசைவேளாளர் குடும்பத்தை சார்ந்த நடன ஆசிரியர் பக்கிரியாபிள்ளை,கண்ணம்பாள் இவர்களுக்கு மகனாக 08-11-1910-ல் பிறந்தவர் நாச்சியார்கோயில் என்.பி.. இராகவப்பிள்ளை. நடன ஆசிரியர்இராமச்சந்திரம்பிள்ளை,இசைகலைஞர் ரெங்கசாமி பிள்ளை,நடராஜபிள்ளை இவரது சகோதரர்கள்.திருமதி காமுஅம்மாள,திருமதி அம்மணிஅம்மாள்,திருமதி வஞ்சுவள்ளி இவரது சகோதரிகள்.

பெயர் காரணம்


இராகவப்பிள்ளை குழந்தையாக இருக்கும்போது அவரது தொட்டிலை சுற்றி ஒரு நல்லபாம்பு இருப்பதை பார்த்த அவரது தாயார் அலறிக்கூச்சலிட தெருவில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து அருகில் செல்ல அஞ்சி பெருமாள் திருநாமங்களை ச் சொல்லி வேண்டி நின்றனர். பாம்பு மேல் கூரை வழியாவெளியேறியது. இதனால் இவருக்கு இராகவன் என்று பெயர் சூட்டினர்.

குடும்பம்


தன் மகனுக்கு இயற்கையிலேயே நல்ல ஞானம் இருப்பதை அறிந்து அவருக்கு மிருதங்கம் பயில ஏற்பாடு செய்தார் ஆனால் இவருக்கோ தவில் தான் அதிக விருப்பம், எனவே இவரை திருவாளப்புத்தூர் பசுபதியாபிள்ளையிடம் இரண்டு ஆண்டுகளும்,பின்பு நீடாமங்களம் என்.டி.மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடம் குருகுலமாக பதினொரு ஆண்டுகள் தவில் பயின்றார் இவரது திறமையும்,பண்பையும் கண்ட மீனாட்சிசுந்தரம்பிள்ளை தன் மகள் ஜெயலட்சுமியை 07-05-1935ல் திருமணம் செய்து வைத்தார். இவருக்கு கமலா,கோமதி,வேம்பு,பிரேமா,சித்திரா என்ற ஐந்து பெண்களும், வாசுதேவன் என்ற ஓரே மகனும் இருக்கிறார்கள்.

இவருடன் வாசித்த நாதசுரகலைஞர்கள்


* கீரனூர் சகோதரர்கள்
* செம்பனார்கோவில் கோவிந்தசாமிபிள்ளை,சகோதரர்கள்
* திருவீழிமிழழை சகோதரர்கள்,
* திருவாடுதுறை ராஜரத்தினம்பிள்ளை,
* திருவெண்காடு சுப்பரமணியபிள்ளை,
* பெரம்பலூர் அங்கப்பாப்பிள்ளை,
* அய்யம்பேட்டை வேணுகோபால்பிள்ளை,
* இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணு சகோதரர்கள்,
* திருவாடுதுறை கக்காயி என்கிற நடராஜசுந்தரம் பிள்ளை,
* குளிக்கரை பிச்சப்பாபிள்ளை,
* குளிக்கரை காளிதாஸ்பிள்ளை
* திருச்சேறை சிவசுப்பிரமணியப்பிள்ளை,
* திருமெய்ஞானம் நடராஜசுந்தரம்பிள்ளை,
* நாச்சியார்கோயில் என்.கே.ராஜம்,என்.கே.துரைக்கண்ணுப்பிள்ளை,
* திருவாரூர் ராஜரத்தினம்பிள்ளை,
* திருவிடைமருதூர் பி.எஸ். வீராசாமிபிள்ளை,
* வேதாரண்யம் வேதமூர்த்திபிள்ளை,
* நாக்கிரிப்பேட்டை கிருஷ்ணன்,
* காருக்குறிச்சி பி.அருணாசலம்.

இவரிடம் பயின்ற மாணவர்கள்

* வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை
* யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்திபிள்ளை,
* பெரும்பள்ளம் வெங்கடேசபிள்ளை
* திருவிழந்தூர் வேணுகோபாலப்பிள்ளை,
* இலுப்பூர் ஆர்.சி.நல்லகுமார்,]]
* அன்னாவரவு பஸ்வய்யா,
* வெல்டூரி நாராயணி,
* புஸலூரி குருவய்யா,
* தஞ்சாவூர் டி.ஆர்.கோவிந்தராஜன்

இவர் பெற்ற பட்டங்கள்

இலங்கை வல்வெட்டித் துறையில் அகில இந்திய தவில்சக்கரவர்த்தி 16-01-1943-ல் பாலநந்தீஸ்வர பூஷண, 04-04-1949-ல் நாதலாயபிரம்மதவில் அரசு

இவரை பற்றி மற்றவர்கள்


1. திருவாடுதுறை ராஜரத்தினம்பிள்ளை, இவரது தேதி கிடைக்கவில்லை என்றால் தன் நிகழ்சியை ஒத்திவைப்பார்
2. திராவிட முன்னேற்ற கழகம் அறிஞர் அண்ணா அவர்களிக்கு வரவேற்பு தந்த்து அதில் திருமெய்ஞானம் நடராஜசுந்தரம்பிள்ளை, நாதசுரம் இராகவப்பிள்ளை தவில் வாசித்தார் மேடை ஏறிய அண்ணா மிக அருமையான நாதசுரதவில் நிகழ்சியை ஊர்வலத்தில் வைத்துவிட்டிர்கள், நான் கேட்டுரசிப்பதற்க்கு வாய்பில்லாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டார்
3. நடிகர்திலகம் சிவாஜிகணோசன்்திருமணத்தில் காரக்குறிச்சி பி.அருணாசலம். நாதசுரம் நாச்சியார்கோயில் இராகவப்பிள்ளை,நீடாமங்கலம் சண்முகவடிவேல், கும்பகோணம் தங்கவேல்பிள்ளை, யாழ்பாணம் தெட்சிணாமூர்த்தி, வலங்கைமான் சண்முகசுந்தரம்பிள்ளை இவர்கள் வாசித்தார்கள் தனி ஆவர்தனம் 2 மணி நேரம் வாசிக்கப்பட்டது ரசிகர்கள் இராகவப்பிள்ளை மீண்டும் வாசிக்கச்சொல் ஓன்ஸமோர் ஓன்ஸமோர் என்றனர் பிள்ளை 3/4 மணிநேரம் வாசித்தார் சிவாஜிகணோசன் ரூபாய் நோட்டுகளை கூடையில் எடுத்து வந்து இராகவப்பிள்ளை க்கு கனகாபிஷேகம் செய்தார்.
4. இவரது தவில் வாசிப்பு பற்றி சுதேசமித்திரன் நாளிதழில் இவர் நாதசுரத்திற்க்கு லாகவமாக வாசிப்பதால் இவர் தன் பெயரை ஸ்ரீஇலாகவப்பிள்ளை என்று பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று எழுதியது.
5. மக்கள் தலைவர் ஐயா ஜி.கே.மூப்பனார் வாரப்பத்திரிக்கை ஓன்றில் நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது என் தந்தையார் எங்கள் ஊர் கோவிலில் சாமி புறப்பாடு நடத்துவார்கள் , அதற்க்கு திருவீழிமிழழசுப்பரமணியபிள்ளை, அவரும் நடராஜசுந்தரம்பிள்ளை, யும் நாதசுரம் வாசிக்க நீடாமங்களம் என்.டி.மீனாட்சிசுந்தரம்பிள்ளை,நாச்சியார்கோயில் இராகவப்பிள்ளை யும் தவில் வாசிப்பார்கள் நான் இவர்கள் வாசிப்பதைக்கேட்டுக்கொண்டு எல்லா வீதிகளிலும் நடந்தே வருவேன், அது முதல் எனக்கு கர்நாடக சங்ககீதத்தில் ஆர்வம் ஏற்பட்டது. என்றார்

மறைவு

ரத்த அழுத்த நோயால் 10-04-1964 ல் இறைநிழலில் கலந்தார்.

நூற்றாண்டு விழா


இராகவப்பிள்ளையின் நூற்றாண்டு விழா நவம்பர் 11, 2011 அன்று கும்பகோணத்தில் உள்ள எஸ். ஈ. டி. மஹாலில் காலை 06.30 மணிக்குத் தொடங்கி இரவு 11.00 மணி வரை நடைபெற்றது. முன்னணி தவில் மற்றும் நாதசுவர கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் மாண்டலின் யு. ஸ்ரீனிவாசன், நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோரின் கச்சேரிகளும் நடைபெற்றன. தமிழக அமைச்சர் கோ.சி.மணி நூற்றாண்டு விழா மலரை வெளியிட ஜி.ஆர்.மூப்பனார் பெற்றுக்கொன்டார். நிகழ்ச்சிகளை நூற்றாண்டுவிழாச் செயலாளர் ஆர். இளங்கோவன் நடத்தினார்.