Monday 14 February 2011

கலைவளர்த்த கலைஞர்கள்(இசை வேளாளர்கள்)

கலைவளர்த்த கலைஞர்கள்(இசை வேளாளர்கள்)



டி. என். ராஜரத்தினம் பிள்ளை

திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்பட்ட டி. என். ராஜரத்தினம் பிள்ளை (1898-1956) ஒரு நாதசுரக் கலைஞர் ஆவார். நாதசுரச் சக்கரவர்த்தி எனப் பலரும் குறிப்பிடும் அளவுக்கு மிகுந்த புகழுடன் விளங்கினார். சில தமிழ்த் திரைப்படங்களில் கதா நாயகனாகவும் நடித்துள்ளார்.

பொருளடக்கம்

* 1 பெயர் காரணம்

* 2 வாழ்க்கை குறிப்பு

* 3 சிறப்புக்கள்


பெயர் காரணம்

ராஜரத்தினம் பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருமருகல் என்னும் ஊரில் 1898 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். திருமருகல் நடேசபிள்ளை நாதஸ்வரக்காரருக்கு வளர்ப்புப் பிள்ளையாகி ராஜரத்தினம்’ ஆனார். திருமருகல் நடேசபிள்ளை மகன், ‘டி.என்.ராஜரத்தினம்’ ஆனார்.

வாழ்க்கை குறிப்பு

காளமேகம் (1940) திரைப்படத்தில் ராஜரத்தினம் பிள்ளை (இடது)

பதினேழாவது திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள் திருமருகல் வந்தபோது, நடேசபிள்ளை வாசிப்பைக் கேட்டு, அவரைத் திருவாவடுதுறை வரச்செய்து ஆதீன வித்வான்’ ஆக்கினார். ராஜரத்தினத்திற்கு ஐந்து வயதாகும்போது நடேசபிள்ளை காலமானார். வயலின் மேதை திருக்கோடிக்காவல் பிடில்’ கிருஷ்ணய்யரிடம் ராஜரத்தினம் சங்கீதம் பயின்றார் பின்னர், எட்டு வயதில் கோனேரி ராஜபுரம் ஸ்ரீ வைத்தியநாதைய்யரிடம் பயின்றார். ஒன்பதாவது வயதில், நன்னிலத்தில் இவரது பாட்டுக் கச்சேரி அரங்கேறியது. பாடும்போது, தொண்டை புண்ணானதால், சன்னிதானம் இவரை நாதஸ்வரம் கற்கச் சொன்னார்.

முதலில் மடத்து நாதஸ்வரக்காரர் மர்க்கண்டேயம் பிள்ளையிடமும் பின்னர், அம்பாசமுத்திரம் கண்ணுசாமி பிள்ளையிடமும் கீரனூர் முத்துப்பிள்ளை நாயனக்காரரிடமும் வாசிப்பு முறையைக் கற்றார். ‘டி.என்.ஆர்’க்குத் கீர்த்தனைகளை வாசிக்கச் சொல்லிக் கொடுத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர், மு.கருணாநிதியின் தந்தை முத்துவேலர். சன்னிதானம் தொடக்கத்தில் மடத்து காலை பூஜையில் வாசிக்க இவருக்கு அனுமதி அளித்தார். திருமாளிகைத் தேவர் சன்னதியில் பெருங்கூட்டத்திற்கு இடையில், பெரிய வித்வான்களின் லாவகத்தோடும், தனி முத்திரையோடும், யாருடைய பாணியையும் பின்பற்றாமல் இவர் பூபாள ராகத்தை வாசிக்கலானார்.

இவருக்கு ஐந்து மனைவியர்.ஆனால் குழந்தைகள் இல்லை வளர்ப்பு மகன் பெயர் சிவாஜ. 1956 டிசம்பர் 12ஆம் தேதி, ராஜரத்தினம் பிள்ளை மாரடைப்பால் காலமானபோது, என். எஸ். கிருஷணன், எம். ஆர். ராதா முதலானோர் உடனிருந்தனர். கவிஞர் கண்ணதாசன் இரங்கற்பா எழுதினார்

சிறப்புக்கள்

* . வி. எம் செட்டியார் பிள்ளை பல மணி நேரம் வாசிக்கும் புகழ்பெற்ற தோடி’ ராகத்தைப் பதிவு செய்து ஆறரை நிமிடத்தில் இசைக்கும் ரிக்கார்டு பிளேட்டை வெளியிட்டார். அது உலகெங்கும் விற்றுச் சாதனை படைத்தது.

* 1955 ஜனவரி 21இல் ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சோஷலிசப் பிரகடன மாநாட்டின்போது, முதல் நாளன்று காங்கிரஸ் தலைவரை வரவேற்க நடந்த ஊர்வலத்தின் முன்னே, நடந்தவாறு நாதஸ்வரம் வாசித்துச் சென்றவர்களுள் ஒருவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை

* தாழ்ந்து கிடந்த இசைக் கலைஞர்களைச் சமூக வாழ்க்கையில் தலைநிமிரச் செய்தவர் இவரே. நாதஸ்வரக் கலைஞர்களுள் முதன்முதலில் கிராப்’ வைத்துக் கொண்டவர் இவரே. கோட், ஷர்வாணி, சுர்வால் முதலிய உடைகளை அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொண்டு தான் வாசிப்பார்.

* நாதஸ்வரத்துக்குத் தம்புரா’வைச் சுருதியாகக் கொண்டு, மிருதங்கம், வீணை, கஞ்சிரா இவற்றுடன் புதுமையாகக் கச்சேரிகள் செய்தார்.


நாதசுவரக் கலைஞர்கள் | தமிழ்த் திரைப்பட நடிகர்கள் | 1898 பிறப்புகள் | 1956 இறப்புகள்