Sunday 28 September 2008

நவக்கிரக தல வழிகாட்டி ஆலங்குடி (குரு)




ஆலங்குடி (குரு)தலம்.

வேறு பெயர் - திரு இரம்பூளை


இறைவன் - ஸ்ரீ ஆபத்சகாயர்


இறைவி - ஸ்ரீ ஏலவர் குழலி


தல நவகோள் சிறப்பு மூர்த்தி – குரு தட்சிணாமூர்த்தி


செல்லும் வழி-

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி நீடாமங்களம் செல்லும் வழியில் 17 கீ.மீ ல் உள்ளது.

ஆலயம் திறந்திருக்கும் நேரம்- காலை 6.00 முதல் 1.00மாலை 4.00 முதல் 9.00


தல விருட்சம் - இத்தலத்தின் தல விருட்சம் பூளைச் செடி இங்கு பூளை செடி அதிகமாக இருந்ததால் இத்தலம் பூளை என்ற பெயர் பெற்றது.


தீர்த்தங்கள் - இங்கு 15 திர்த்தங்கள் உள்ளதாக்க் கூறுகிறார்கள் சில தீர்த்தங்கள் உள்ளன. சில திர்த்தங்கள் கோயிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளன என்கின்றனர்.

அமுது கடையும் போது வாசுகி பாம்பு விஷம் கக்கியது,பாற்கடலிலும் விஷம்முண்டாகி இரண்டு விஷமும் ஒன்று சேர்ந்து ஆலகால விஷமாக உருவெடுக்க உக்ரம் தாங்க முடியாது சிவனை தஞ்சமடைந்தனர் தேவர்கள் அந்த விஷத்தை சிவன் விழுங்க பார்வதி சிவனின் தொண்டையை அழுத்திப்பிடிக்க விஷம் அவர் தொண்டையிலேயே தங்கி விட்டது. கண்டம் நீல நிறமாக மாறியது, அதனால் சிவனை நிலகன்டண் எனவும்,ஆபத் சகாயர் எனவும் பேர் பெற்றார்.அதனால் இத்தலம் ஆலம்குடி எனப் பெயர் பெற்றது.

No comments: