Wednesday 8 October 2008

சொன்னாங்க..சொன்னாங்க

இந்தியாவில் ஆண்டு முழுவதும் தேர்தல் நடக்கும் சூழல் இருப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, சட்ட சபைகளுக்கும் லோக் சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அவசியம்.
- அப்துல் கலாம்

மின்சாரத்தில் எவ்வளவு பற்றாக்குறை, நிவர்த்தி செய்ய எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எப்போது பற்றாகுறை தீரும் என்பதை அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

-விஜயகாந்த்


தனக்குத் தானே விருது அளித்துக்கொண்டும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகளையும், விருதுகளையும் பெற்றுக்கொடுத்தும் தமிழை ஒரு வியாபார பொருளாக பயன்படுத்துகிற முத்தமிழ் விற்றவர் தான் கருணாநிதி

-ஜெயலலிதா


மக்கள் நலனுக்கு எதிரான கொள்கைகயை கடைப்பிடித்ததால் தி.மு.க.வின் செல்வாக்கு சரிந்துவிட்டது. இதை கருத்துக்கணிப்பு நடத்தித் தான் கண்டுபிடிக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை

-தா.பாண்டியன்.

No comments: