Thursday 16 October 2008

காங்கிரஸ் கருத்து

காங்கிரஸ் கருத்து:

"இலங்கைப் பிரச்னை அதன் உள்நாட்டு விவகாரம்' என காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இறையாண்மை கொண்ட அடுத்த நாடுகள் குறித்து கோரிக்கை வைப்பவர்கள், இந்தியாவின் இறையாண்மை என்பது நமது எல்லையுடன் முடிவடைகிறது என்பதை அறிய வேண்டும். அடுத்த நாட்டு உள்விவகாரத்தில் இந்திய அரசு தலையிட முடியாது. அடுத்த நாட்டின் உறவுகள் மத்திய அரசு சம்பந்தப்பட்ட விஷயம். அடுத்த நாடுகளில் நடக்கும் வன்முறைகளைக் கண்டனம் செய்யும் போது, மத்திய அரசு இதைச் செய்யவேண்டும் என்று கூற முடியாது என்று கருதுகிறேன். இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

No comments: