Tuesday 21 October 2008

தேன் எடுப்பவன்

பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்
தேன் எடுப்பவன்
புறங்கை நக்காமல் இருப்பானா?

மனிதர்களிடம் சில மாறாத பண்புகள் உண்டு.அதில் ஒன்று சுயநலம்,சுயநலம் இல்லாதவர்களே இல்லை என்று கூட கூறிவிடலாம்இதனால் சில இயல்புகள் எதார்தமாகி விட்டன.இன்று லஞ்சம் என்பது மாமூல் என ஆகி விட்டது லஞ்சம் கொடுக்காமல் எந்த காரியமும் ஆகாது என்ற நிலை வந்து விட்டது.இந்த இயல்பு நிலையை விளக்கும் பழமொழி தான் இது.
இருத்தாலும் சில நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.இவர்கள் என்றும், எந்த நிலையுலிம் தன்னையும், தன் குணத்தையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
சுட்டாலும் வெண்சங்காய்,தீயில் இட்டாலும் ஒளிவிடும் பொன்னாய் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதுபற்றி விளக்கும் பழமொழி


குப்பையிலே காடந்தாலும்
குண்டு மணி நிறம் மாறாது.


கருப்பு சிவப்பு நிறத்தில் ஒளி விடும் ஒரு விதை தான் குண்டுமனி. இது குப்பையில் எவ்வளவு நாள் இருந்தாலும் இதன் நிறம் மாறாது இதை உதாரணமாக்கி உயர்ந்தவர்கள் எவ்வளவு தாழ்த நிலைக்கு வந்தாலும் அவர்கள் மாற மாட்டார்கள் என்பதை விளக்கும் பழமொழி இது.

தூக்கி விட்ட பூனையா எலி பிடிக்கும்?

ஒரு செயலை செய்கிற ஊக்கம் தானாகவே வரவேண்டும்.பிறர் சொல்லி வரக்கூடாது.அப்படி சொன்னாலும் உண்மையான ஊக்கம் வராது இதை விளக்கிட தான் இந்த பழமொழி
எலி பிடிக்க வேண்டும் என்றால் முதலில் பூனைக்கு பசியும், தேவையும் வேண்டும்.பின் அது தானாக எழுந்து பதுங்கி,சாதுர்யமாய் எலியை பிடிக்க வேண்டும்.சோம்பிக்கிடக்கும் பூனையை நாமே தூக்கிவிட்டு எலியை பிடி என்றாள் அது பிடிக்குமா, அது நடக்குமா?

Sunday 19 October 2008

சொன்னாங்க..சொன்னாங்க

29 மாத கால ஆட்சியில் கருணாநிதி, 160 அரசு விழாக்களிலும், 63 பொது மற்றும் கட்சி விழாக்களிலும், 102 சினிமா விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார். இவைகளுக்கே நேரம் போதாதபோது, மக்கள் பிரச்னைகள் குறித்து சிந்திக்க நேரம் எப்படி கிடைக்கும்? -ஜெயலலிதா

இலங்கைத் தமிழர் களுக்காக தி.மு.க., எதையும் செய்யவில்லை என குற்றச்சாட்டு கூறப்பட்டது. 1976, 1991ம் ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சி கலைக்கப்பட்டதற்கு, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க., செயல்பட்டது என்பது தான் முக்கியமான குற்றச்சாட்டு. -கருணாநிதி

கார்ட்டூன்-5

நன்றி குமுதம்

Saturday 18 October 2008

இந்திய தம்பதியர் செஸ்க்கு-7- வது இடம்

ஆசிய பசிபிக் செக்ஸ், சுகாதாரம் மற்றும் ஒட்டு மொத்த நல வாழ்வு அமைப்பு சார்பில் உலகில் 13 நாட்டு மக்களிடம் புதிய ஆய்வு நடத்தப்பட்டது.

அவர்களிடம் வாழ்க்கைக்கு தேவையான 17 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதில் இந்தியர்கள் குடும்ப வாழ்க்கை மீது அக்கறை செலுத்துவதில்தான் முதல் கவனம் வைத்துள்ளனர். அடுத்தபடியாக எதிர்காலம் பற்றிய திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர்.
இந்த வரிசையில் 3-வதாக பணம் சம்பாதிப்பதும், 4-வதாக உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதும் இடம் பெற்றுள்ளது.
இந்திய ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் செக்ஸ்சை 7-வது இடத்தில்தான் வைத்துள்ளனர். அதே சமயம் பெண்கள் இதனை 14-வது இடத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.
உலகில் அதிக பட்சமாக இந்தியர்கள்தான் செக்ஸ் விஷயத்தில் அதிக திருப்தி அடைவதும் தெரிய வந்துள்ளது.

73 சதவீத இந்திய தம்பதிகள் முழு திருப்தி இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிலிப்பைன்சில் 52 சதவீதம் பேரும், தாய்லாந்தில் 30 சதவீதம் பேரும், சீனாவில் 23 சதவீதம் பேரும் ஜப்பானில் 10 சதவீதம் பேரும் திருப்தியாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இந்தியர்கள் 40 வயதுக்கு பிறகு தங்களது ஆண்மையை மெது, மெதுவாக இழப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.


நன்றி மாலை மலர்

Friday 17 October 2008

கலைஞர் கடிதம்

சென்னை, அக். 17-
முதல்- அமைச்சர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்து அரசியல் இயக்கங்களும், அமைப்புகளும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியதின் காரணமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்து விரைவுபடுத்திடவும் - நிலையான அமைதி இலங்கையில் உருவாகிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளவும், இனப்படுகொலையும், போரும் அல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மத்திய அரசு முன் வரவேண்டுமென்று கேட்டுக்கொள்வதற்காக தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று 14-10-2008 அன்று கூட்டப்பட்டு, அதற்கான அழைப்புக் கடிதங்களை ஒவ்வொரு கட்சியின் தலைவருக்கும் நானே கையெழுத்திட்டு அனுப்பினேன்.
கடிதங்கள் அனுப்பப்பட்ட செய்தி ஏடுகளிலும் வெளி வந்தது. அதிலே நான்கு கட்சிகள் மட்டும் அரசு சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகச் செய்தி அறிவித்தார்கள்.
அவர்களைத்தவிர மற்ற கட்சியினர் அனைவரும் கூட்டத்திற்கு வருகை தந்து, இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையோடு தங்கள் தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.
அவர்களுக்கெல்லாம் அந்தக் கூட்டத்திலேயே நன்றி தெரிவித்துக் கொண்டேன். இப்போதும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக அரசின் சார்பாக நான் அழைப்பு விடுத்து கூட்டிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தையே கண்துடைப்பு நாடகம் என்று ஜெயலலிதா புறக்கணிப்பு செய்தார்.
அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்த அடுத்த கணமே ம.தி.மு.க. தலைவர் வைகோவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். விஜயகாந்தும் வரவில்லை.
ஜெயலலிதா புறக்கணித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் நடைபெறுகின்ற தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டும் என்றும், இரண்டு வாரக் காலத்திற்குள் அதாவது அக்டோபர் 28-ஆம் தேதிக்குள் எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பார்த்தால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது என்றும், இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்றும், இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப்புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம் என்றும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்கள் இறந்ததற்கு இரங்கற்பா தெரிவிக்கும் கருணாநிதி என்றும் -என்னைக் கேலி செய்தும், கண்டித்தும், ஜெயலலிதா காரசாரமாக அறிக்கை விடுத்தார்.
இதனைப்பற்றி; காலமெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர் வடித்தவரும், எனக்குக் கடிதம் எழுதி அனுப்பி விட்டு, பல்வேறு ஆபத்துகளைக் கடந்து வவுனியா காடு வரையிலே சென்று திரும்பியவருமான வைகோ கடுகளவு மறுப்போ அல்லது அதுபற்றி கருத்தோ இன்றுவரை தெரிவிக்கவில்லை என்பதுதான் எனக்கு ஏற்பட்ட வியப்பு!
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் ஜெயலலிதாவை கண்டித்தும், மறுத்தும் உண்மையை உலகத்திற்கு உணர்த்திடும் அளவிற்கு வெளியிட்ட அறிக்கைதான் இங்குள்ள தமிழர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை "பொழுது போக்கும் கூட்டம்'' என்றும், "கபட நாடகம்'' என்றும், "மோசடி நாடகம்'' என்றும் அர்ச்சனை செய்யவும் ஜெயலலிதா தயங்கவில்லை.
அவரும் வேறு சிலரும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்ததையே தாங்கிக் கொள்ள முடியாமல், லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டி. விஜயராஜேந்தர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தன் உடலிலே ஓடுகின்ற தமிழ் ரத்தம் கொதிப்பேறி ஆவேசமாக கண்டனக் குரல் எழுப்பினார்.
அப்போது கூட நான் அவரை அமைதிப்படுத்தி இது போன்ற நேரத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றும், இந்தக் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்து அறிக்கை விட்டவர்கள் இலங்கையிலே படுகொலைக்கு ஆளாகின்ற அந்த தமிழர்களை மதிக்காதவர்கள் என்றோ, அவர்களை ஏற்காதவர்கள் என்றோ எண்ணி விடக் கூடாது; அவர்களுக்கு என்னைப்பிடிக்காத காரணத்தால்தான் என் அழைப்பையேற்றுக் கொள்ளவில்லை என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
எனவே இதை மறந்து விட்டு எல்லோரும் ஒற்றுமையாகக் குரலெழுப்பி இலங்கைத் தமிழர்களுக்காக -அந்தப் பூமியில் நிலையான அமைதி தோன்றுவதற்காகப் பாடுபடுவோம் என்றுதான் வேண்டிக் கேட்டுக் கொண்டேன்.
ஆனால் ஜெயலலிதா அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் வெளிவந்த பிறகு கூட, நம் மீது பொழிகின்ற அர்ச்சனைகளை நிறுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கட்சிக்காரர்களே முகம் சுளிக்கின்ற அளவிற்கு - முணுமுணுக்கின்ற அளவிற்கு இலங்கைத் தமிழர்களைப் பற்றி தனக்குத்தான் கவலை என்பதைப் போல வரலாறு தாங்காத வடிகட்டிய பொய்களை அறிக்கைகளாக வடித்தெடுத்து இங்குள்ள ஏடுகளுக்குப் பக்கம் பக்கமாக வழங்கி வருகிறார்.
ஏடுகள் நடத்துவோரில் சிலர் "தமிழ் இன உணர்வு'' என்ன விலையென்று கேட்பவர்களாக இருப்பதால் அந்த அறிக்கைகளை தலை வாழை இலையிலே ஊற்றப்பட்ட சுவையான பால் பாயாசமாக எண்ணி அருந்தி மகிழ்கிறார்கள்.
என் செய்வது? இலங்கைத் தமிழ் மக்களின் விமோசனத்திற்காக தமிழ் நிலத்தில் எப்பொழுது இன உணர்வு எழுந்தாலும் அந்த உணர்வு உருவாகும் பொழுதே, அதைக் கெடுப்பதற்கு உலைவைப்போர் சிலர் உருவாகி விடுகிறார்களே; அந்த வரிசையில் வாள் சுழற்றி நம்மோடு வம்புக்கு வருகின்ற ஜெயலலிதாவை இங்குள்ள தமிழர்கள் அல்லவா அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
இன்று நேற்றல்ல; இவர் ஆட்சியிலும் சரி -நம் ஆட்சியிலும் சரி -ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்கள் எப்படி நடத்தப்பட்டன என்பதற்கு ஓர் உதாரணம்;
1989-ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சி நடைபெற்றபோது ஈழத் தமிழ் அகதிகள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் உயர் கல்வி பயில வேண்டுமென்பதற்காக -தமிழக அரசு மருத்து வக் கல்லூரியில் 20 இடங்களையும், பொறியியல் கல்லூரியில் 40 இடங்களையும், வேளாண்மைக் கல்லூரியில் 10 இடங்களையும், பாலி டெக்னிக்குகளில் 40 இடங்களையும் ஒதுக்கீடு செய்தது.
ஆனால் 1991-ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், இந்த இட ஒதுக்கீட்டையெல்லாம் அ.தி.மு.க. அரசு தடை செய்து ஆணையிட்டது. மீண்டும் 1996-இல் கழக ஆட்சி வந்த பிறகு அந்த வசதிகள் மீண்டும் வழங்கப்பட்டன. இதையெல்லாம் தமிழ்நாட்டினர் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் ஜெயலலிதா அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.
"தமிழ் இனத் தலைவர்'' என்று எனக்கு நானே பட்டம் வழங்கிக் கொண்டதாக ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். தன்னுடைய பிறந்த நாளுக்காக ஆண்டு தோறும் சிறைக் கைதிகளை விடுவித்தவர் அல்லவா? அவர் அப்படித்தான் சொல்லுவார்.
அவர் முதல்வராக இருந்தபோது திரைப்பட நகரத்திற்கு கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். பெயரை வைக்க வேண்டுமென்று வலியுறுத்தியும், அதனைக் கேட்காமல் தன் பெயரையே சூட்டிக் கொண்டவர் அல்லவா? அவர் அப்படித்தான் சொல்லுவார்.
அரசு போக்குவரத்துக் கழகம் ஒன்றுக்கு "ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம்'' என்று பெயர் சூட்டிக் கொண்ட தன்னலமற்ற தயாபரி அல்லவா? அவர் அப்படித்தான் சொல்லுவார்.
அறிக்கைக்கு அறிக்கை -பேச்சுக்கு பேச்சு -சவாலுக்கு சவால் என்று போனால் -அவற்றை அம்மையார் எப்படி அணுகுவார் என்பது நமக்குத் தெரியும் என்பதால் அவரிடம் அனுதாபம் காட்டிவிட்டு -இப்போது நாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலே நிறைவேற்றப்பட்ட ஆறு தீர்மானங்கள் - ஆம், இலங்கைத் தமிழர்களுக்கு ஆறுதல் தரும் தீர்மானங்களாக - நிறைவேற்றப்பட்டிருக்கிறதே; அவற்றை நடைமுறைப்படுத்த என்ன வழி - இன்னும் எப்படியெல்லாம் அந்தக் கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுத்து இந்திய அரசின் கவனத்தை இதயப் பூர்வமாக நம் மீது திருப்புவதற்கு என்ன வழிமுறைகள் என்பதையெல்லாம் சிந்திக்கவும், அவற்றைச் செயல்படுத்த வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்.
அந்தச் சிந்தனையில் எழுந்ததுதான் அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டு -சென்னையில் வரும் 21-ஆம் தேதி -நாம் நடத்தவுள்ள "மனிதச் சங்கிலி அணிவகுப்பு'' ஆகும்.
நான் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் மாத்திரமல்ல - தமிழகத்தில் உள்ள எல்லா அமைப்புகளின் தலைவர்களும் தங்கள் பங்களிப்பினை இதற்கு வழங்கிட வேண்டும். நமது வேண்டுகோள் அனைத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களாக ஏடுகளில் வெளிவந்துள்ளன. அவற்றை மத்திய அரசுக்கும் குறிப்பாக பிரதமருக்கும் சிறப்பாக சோனியா காந்தி அம்மையாருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.
பிரதமர் இத்திங்கள் 6-ஆம் தேதியன்று மயிலை மாங்கொல்லை கூட்டம் நடைபெற்ற அன்றே, காலை 11 மணியளவில் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு என்னிடம் பேசியதோடு, நான் அப்போது அவரிடம் விடுத்த நான்கு கோரிக்கைகளையும் அலட்சியப்படுத்தாமல், அன்றைய தினம் மாலையிலேயே இலங்கைத் தூதுவரை அழைத்து பேசும்படி ஆணை பிறப்பித்து, அவ்வாறே பேசப்பட்ட அதிகார பூர்வமான செய்தியும் அனைத்து ஏடுகளிலும் வெளி வந்தது.
இந்தியப் பேரரசு இங்குள்ள தமிழ் இனத்தவரின் வேண்டுகோளை அலட்சியப் படுத்தவில்லை என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்ட காரணத்தால், அந்த நம்பிக்கையை ஆணிவேராகக் கொண்டு மேலும் பல வெற்றி வாய்ப்புகள் தழைக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் 14-ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் அவதியுறும் தமிழ்க் குடும்பங்களைக் காப்பாற்ற நித்த நித்தம் படுகொலைக்கு ஆளாகும் நமது இன மக்களைப் பாதுகாக்க - பசியால் துடிக்கும் பச்சிளம் குழந்தைகள் ஈழத்தில் தங்கள் தாய்களின் முகங்களைப் பார்க்க - அந்தத் தாய்களின் முகங்களோ தமிழகத்தில் உள்ள நம் முகங்களை அன்றோ தேடுகின்றன என்ற உணர்வோடு அவர்கள் வாழ்வில் இனியாவது அமைதி துளிர் விடச் செய்ய ஆயத்தமாகட்டும் தமிழகம் என்பதை வலியுறுத்தவும்;
ஆதரவுக்கரம் நீட்டட்டும் இந்தியப் பேரரசு என்பதை அறவழியில் நினைவூட்டவும்தான் இங்கே சென்னையில் - செங்குருதி தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற மூச்சு, எங்கள் தமிழ் மூச்சு என்று முரசம் கொட்டும் தமிழர் சேனை; தாய்மார்கள் சேனை; இளம் மாணவர்கள் சேனை; இங்குள்ள கலைஞர்களின் சேனை; இடையறாது உழைக்கும் பாட்டாளிகள் சேனை எல்லா சேனைகளிலும் ஓரிருவர் கூட ஓய்வு கொள்ளாது அனைவரும் கலந்து கொள்வோம் அந்த அணிவகுப்பில்!
மறவாதீர் மனிதச் சங்கிலி -21ஆம் தேதி - பிற்பகல் 3 மணிக்கு! வட சென்னையில் சிங்காரவேலர் மாளிகையிலிருந்து தொடங்கி- அண்ணா சாலையைக் கடந்து தென் சென்னையைத் தாண்டி -தாம்பரத்தையே தாண்டுமோ என்ற அளவிற்கு தமிழர் அணி வகுக்கும் "சங்கற்பச் சங்கிலி''! ஈழத் தமிழரைக் காப்போம் என்ற சங்கற்பச் சங்கிலி!
அக்டோபர் 14 -அனைத்துக் கட்சிக் கூட்டம் - நமது உணர்வைக் காட்டும் பாசறை. அக்டோபர் 21 - அந்த உணர்வில் தோய்ந்த உறுதி படைத்த நெஞ்சங்களின் அறப்போர் படை வரிசை. மனிதச் சங்கிலி! மனித நேயச் சங்கிலி!
இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவோம் -என முழங்கும் முரசுகளின் வரிசை அது! வாரீர்! வாரீர்! தமிழகம் எங்கணுமிருந்து தடந்தோள் படைத்தோரே! தாய்க்குலமே! கழனியில் உழைப்போரே! கடலில் உழல்வோரே! கலையுலகத்தினரே! கிளம்பிற்றுக் காண் தமிழச் சிங்கக் கூட்டமென தலைநகர் சென்னை நோக்கி வருக! தமிழர் நாம் என நெஞ்சுயர்த்தியவாறு வந்திடுக சென்னைக்கு!
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

சொன்னாங்க..சொன்னாங்க

இலங்கை தமிழர்களுக்காக கண்ணீர் வடித்த வைகோ, ஜெயலலிதாவின் அறிக்கையை மறுத்தோ, அதுபற்றி கருத்து தெரிவிக்கவோ இல்லை
-கருணாநிதி

சொன்னாங்க..சொன்னாங்க

கலைஞர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார், உள்நாட்டுப் போரில் தலையிடும் அதிகாரம் இந்தியாவுக்கு இல்லை
-ஜெயலலிதா

Thursday 16 October 2008

காங்கிரஸ் கருத்து

காங்கிரஸ் கருத்து:

"இலங்கைப் பிரச்னை அதன் உள்நாட்டு விவகாரம்' என காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இறையாண்மை கொண்ட அடுத்த நாடுகள் குறித்து கோரிக்கை வைப்பவர்கள், இந்தியாவின் இறையாண்மை என்பது நமது எல்லையுடன் முடிவடைகிறது என்பதை அறிய வேண்டும். அடுத்த நாட்டு உள்விவகாரத்தில் இந்திய அரசு தலையிட முடியாது. அடுத்த நாட்டின் உறவுகள் மத்திய அரசு சம்பந்தப்பட்ட விஷயம். அடுத்த நாடுகளில் நடக்கும் வன்முறைகளைக் கண்டனம் செய்யும் போது, மத்திய அரசு இதைச் செய்யவேண்டும் என்று கூற முடியாது என்று கருதுகிறேன். இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

கார்ட்டூன்-4


நன்றி தினமலர்

நன்றி துக்ளக்

நன்றி தினபூமி




Tuesday 14 October 2008

அரசமரம் ஒரு "கற்பகதரு'


அரசமரம் ஒரு "கற்பகதரு'
சாஸ்திரங்களில், "புத்ரதாரா' என்று அழைக்கப்படும் அரச மரத்தினை சுற்றி வந்தால், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பன்நெடுங்கால நம்பிக்கை. சமீபத்திய ஆய்வுகளில், இந்த கூற்று உண்மை தான் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. புத்திர பாக்கியத்தை தரும் மருத்துவ குணம் அரச மரத்திற்கு உள்ளது என்று இந்த ஆய்வுகளில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இம்மரத்தின் இலைகளில், பட்டு பரவும் காற்றில், சில விசேஷ கதிர்வீச்சு இருப்பதாக கூறப்படுகிறது. அரச மரம் பல்வேறு வழிகளில் பயன்படுகிறது.

அரச மரத்தில் வசிக்கும் ஒரு வகை பூச்சியினம், இம்மரத்தின் இலைகளை உண்டு "சீலிங் வேக்ஸ்' எனப்படும் ஒரு வகை அரக்கை வெளியிடுகிறது. இந்த அரக்கிற்கு, அதிகமான கிராக்கி இருக்கிறது. இலைகளை நீரில் ஊற வைத்து, சதைப் பகுதிகளை நீக்கிவிட்டால், சல்லடை போன்ற வடிவம் கிடைக்கிறது. இதைக் கொண்டு அழகிய அலங்காரப் பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. இம்மரத்தின் விதைகளை பொடியாக்கி, உண்டு வந்தால் மகப்பேறு கிடைக்கும். மேலும், அரச விதைப்பொடி ஆஸ்துமாவிற்கு சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. மரத்தின் பட்டைகளில் உள்ள சாறு, "ஸ்டெபெலோகாக்கஸ்' மற்றும் "எஸ்கர்கியாகோவி' போன்ற பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துவதற்காக
ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

நன்றி தினமலர்

கார்ட்டூன்-3



நன்றி தினபூமி

Sunday 12 October 2008

Friday 10 October 2008

கார்ட்டூன் (1)


நன்றி தினமலர்



















சொன்னாங்க..சொன்னாங்க

உணவு, உடை, இருப்பிடம், மருத்துவப் பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை திரட்டித் தர மத்திய அரசு முன்வர வேண்டும்.
-ஜெயலலிதா


கச்சத்தீவு பறிபோனதால் தான் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது முதல்வராக இருந்த கருணாநிதி, அதை எதிர்க்கவில்லை.
- வைகோ

Wednesday 8 October 2008

நான் கண்ட காந்தி எம்.ஜி.ஆர்

நான் கண்ட காந்தி........

காந்திஜியின் பேரில் எம்.ஜி.ஆர். கொண்டுள்ள பக்திக்கு அளவேயில்லை. இதோ... காந்திஜி பற்றி சொல்கிறார்

எம்.ஜி.ஆர்.காந்திஜியை நீங்கள் முதலில் பார்த்தீர்கள்?

1930ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. காரைக்குடியில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நான் நடித்துக்கொண்டிருந்த பொழுது காரைக்குடிக்கு வந்திருந்தார் காந்திஜி. அப்போது தான் அவரை பார்த்தேன்.

அவரை பார்த்ததும் முதன்முதலில் உங்களுக்கு எத்தகைய உணர்வு ஏற்பட்டது?

அமைதியும் எளிமையுமே உருவான அவரை பார்த்ததும் ஏதோ தெய்வ தன்மை பொருந்திய ஒருவரை பார்ப்பது போன்ற பக்தி உணர்வு தான் ஏற்பட்டது. அந்த புன் சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்றும் சித்திரமாக பதிந்து இருக்கின்றன.

காந்திஜியின் கொள்கைகளில் உங்களுக்கு பிடித்தமானவை எவை?

மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு, சமூக சேவை, எளிமை, உண்மை, தேசிய உணர்வு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

காந்திஜியை பற்றி அண்ணா உங்களிடம் எப்போதாவது கருத்து பரிமாறிக் கொண்டதுண்டா?

கருத்து பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு நான் பேரறிஞர் அண்ணாவுக்கு சமமானவன் அல்ல. காந்திஜிக்கு முன்பு இருந்த அரசியல்வாதி“கள் எப்போதும் தாங்கள் எடுத்துக் கொண்ட காரியத்தின் வெற்றியை பற்றித்தான் கவலைப்பட்டார்களே தவிர அந்த வெற்றியை அடைவதற்கான வழிகளை பற்றி கவலைப்பட்டது இல்லை. காந்திஜி தான் அரசியல் உலகத்திலும் உண்மையையும், நேர்மையையும் கடைப்பிடித்து வெற்றி காண முடியும் என்று நிரூபித்தவர் என்று அண்ணா பல முறை கூறியிருக்கிறார்.

திரைப்படங்கள் மூலமாக காந்திஜியின் கொள்கைகளை எப்படி பரப்பலாம்?

காந்திஜி கூறிய உயர்ந்த கருத்துக்கள், தத்துவங்கள் அனைத்துமே அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. மது விலக்கை பற்றி யாராவது வலியுறுத்தினால் அங்கே காந்தி இருக்கிறார். தீண்டாமையை எதிர்த்து எவரேனும் போராடினால் அங்கே காந்தி இருக்கிறார்.உண்மை, எளிமை, அன்பு, நேர்மை ஆகிய பண்புகள் எங்கெங்கு இருக்கின்றனவோ, அங்கெல்லாம் காந்தி இருக்கிறார். மனித வாழ்க்கையிலுள்ள நல்ல தன்மைகள் தான் மகாத்மா. சுருக்கமாக சொன்னால் மனித தன்மை தான் மகாத்மா. ஆகவே அவருடைய கருத்துக்களை பரப்புவதற்கென்று தனியாக படம் எடுக்க வேண்டும் என்பதில்லை.
உயர்ந்த கருத்துக்கள் உள்ள ஒரு படத்தை எடுத்தாலே, அது காந்திய கருத்துக்கள் உள்ள படம் என்று தான் பொருள்.

காந்திஜிக்கு மது, புகை இவை பிடிக்காது. இந்த கொள்கைகயை நடைமுறையில் கடைப்பிடித்து வரும் நீங்கள் அண்மையில் சிகரெட் கம்பெனி நடத்திய விழாவில் கலந்து கொண்டது ஏன்?

ஆரம்பத்தில் அதற்கு ஒப்புக்கொண்ட போது எனக்கு அந்த விவரம் தெரியாது. வறட்சி துயர் துடைப்பு பணிகளுக்காகம், ஸ்டான்லி மருத்துவமனைக்காகவும் நிதி சேர்க்கும் நல்ல காரியம் ஒன்று மட்டும் நினைத்து ஒப்புக்கொண்டேன். பிறகு தான் உண்மை தெரிந்தது. வருத்தப்பட்டேன். அத்துடன் நிற்கவில்லை அதை அன்று மேடையிலேயே கூறி விட்டேன். நிறைய செலவழித்து சிகரெட்டுக்கு விளம்பரம் செய்து மக்களை குறிப்பாக இளம் உள்ளங்களை கவர்வதை விட, இதே பண்தை எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு செலவழிக்கலாம் என்று பகிரங்கமாகவே பேசினேன். கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு இதில் வருத்தம் தான். இருந்தாலும் எனக்கு சரியென்று பட்டதை மறைக்காமல் சொன்னேன். அப்படி பேசிய பிறகு தான் என் மனதுக்கு நிம்மதியாக இருந்தது.

ஆனந்த விகடன்- (08.10.2008)

சொன்னாங்க..சொன்னாங்க

இந்தியாவில் ஆண்டு முழுவதும் தேர்தல் நடக்கும் சூழல் இருப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, சட்ட சபைகளுக்கும் லோக் சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அவசியம்.
- அப்துல் கலாம்

மின்சாரத்தில் எவ்வளவு பற்றாக்குறை, நிவர்த்தி செய்ய எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எப்போது பற்றாகுறை தீரும் என்பதை அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

-விஜயகாந்த்


தனக்குத் தானே விருது அளித்துக்கொண்டும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகளையும், விருதுகளையும் பெற்றுக்கொடுத்தும் தமிழை ஒரு வியாபார பொருளாக பயன்படுத்துகிற முத்தமிழ் விற்றவர் தான் கருணாநிதி

-ஜெயலலிதா


மக்கள் நலனுக்கு எதிரான கொள்கைகயை கடைப்பிடித்ததால் தி.மு.க.வின் செல்வாக்கு சரிந்துவிட்டது. இதை கருத்துக்கணிப்பு நடத்தித் தான் கண்டுபிடிக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை

-தா.பாண்டியன்.

சொன்னாங்க..சொன்னாங்க

எம்.ஜி.ஆர்., உயிரோடு இருந்திருந்தால் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எப்போதோ தீர்வு ஏற்பட்டிருக் கும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் குறைகளை அடுக்கிய முதல்வர் கருணாநிதி, இப்போது ஆட்சி குறித்து யாரும் குறை சொல்லக் கூடாது என்கிறார்.
-விஜயகாந்த்

சொன்னாங்க..சொன்னாங்க

இலங்கைப் பிரச்னை குறித்து தி.மு.க.,வினரின் எழுச்சியை, தமிழர்களின் உணர்ச்சியை, வெறிபிடித்த சிங்களவர்களால் கூட புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இங்குள்ள சிறு நரிகள், சிலந்திப் பூச்சிகள் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றன
-கருணாநிதி

Tuesday 7 October 2008

சொன்னாங்க..சொன்னாங்க

மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்று தனது 7 தி.மு.க.அமைச்சர்களை'யும்.திரும்ப பெறுவது தான் தமிழ் இனத்தின் வாழ்வுக்கு தி.மு.க. அனுப்புகின்ற சிறந்த தந்தி.
- சரத்குமார்

அரசியல் கார்டுன்

நன்றி தினபூமி

காட்டுன்-2

மொபைல் போனின் முக்கிய பயன்கள்

மொபைல் போனின் முக்கிய பயன்கள்

மொபைல் போன் அடுத்தவருடன் பேசுவதற்கு மட்டும் என்ற நிலை மாறி இன்டர்நெட் இøணைப்பு தருவதாகவும், ஆடியோ மற்றும் வீடியோ, எப்.எம். ரேடியோ, இமெயில் எனப் பல வசதிகளுடன் இயங்கத் தொடங்கிவிட்டன. இவை தவிர இன்னும் சில எளிமையான ஆனால் மிக மிகப் பயனுள்ள வசதிகள் பல இருக்கின்றன. அவற்றைக் காணலாம்.

1. நேரக் கட்டுப்பாடு: உங்கள் மொபைல் போன் மூலம் உங்களுடைய அரிய நேரத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம். போனில் உள்ள ஷெட்யூலர் பயன்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் ஒலிக்கும்படி அமைக்கலாம். 7 மணிக்கு ஒரு இடத்திற்குச் செல்ல கிளம்ப வேண்டும் என்றால் அந்த நேரத்திற்கு ஒரு நினைவு படுத்தும் அலாரம் ஒன்று வைக்கலாம். அதே போல் காலையில் தூக்கத்திலிருந்து எழுப்பி விடும் வகையிலும் அலாரம் வைத்துக் கொள்ளலாம்.

2. மூன்று வழியில் அழைத்தல்: ஆங்கிலத்தில் threeway calling என்று கூறப்படும் வசதி பல மொபைல் போன்களில் தரப் பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி உங்கள் இரு நண்பர்களை மொபைலில் அடுத்தடுத்து அழைத்து மூவரும் ஒரு டேபிளில் அமர்ந்து பேசுவது போல பேசிக் கொள்ளலாம். முதல் நண்பரின் போன் எண்ணைக் கூப்பிட்டு தொடர்பு கிடைத்தவுடன் விஷயத்தைச் சொல்லிப் பின் இன்னொரு நண்பரின் எண்ணை டைப் செய்து send அழுத்தினால் அந்த தொடர்பும் கிடைக்கும். இப்போது மீண்டும் send அழுத்த மூவரும் தொடர்பில் இருப்பீர்கள்.

3. மொபைல் ஆடியோ சாதனமாக: பல மொபைல் போன்களில் வாய்ஸ் ரெகார்டர் (voice recorder) என்னும் வசதி தரப்பட்டுள்ளது. நீங்கள் மறதி ஆசாமியாக இருந்தால் இது உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நீங்கள் செய்திட வேண்டிய வேலை, அன்னிய மொழியில் சில சொற்கள், மனதில் இருத்தி வைக்க வேண்டிய சொற்கள் எனப் பல விஷயங்களை நீங்களே பேசி பதிவு செய்து கொள்ளலாம். பின் இவற்றைக் கேட்டு அதன்படி செயல்படலாம். வாய்ஸ் ரெகார்டர் இல்லை என்றால் உங்கள் போன் எண்ணுக்கே வாய்ஸ் மெசேஜ் கொடுத்து பதிந்து வைத்துக் கொள்ளலாம்.

4.படங்கள் பங்கிட்டுக் கொள்ளல்: பல மொபைல் போன்கள் படங்களைப் பங்கிட்டுக் கொள்ளும் (picturesharing) வசதியினைக் கொண்டிருக்கின்றன. பல படங்கள் உங்களுக்கு உங்களின் கருத்தினைச் சரியாக வெளிப்படுத்த உதவும். அவற்றைப் பதிந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். மேலும் நூலகத்தில் ஒரு நூலில் உங்களுக்கு அதிகம் பயன்படும் படம் ஒன்று குறித்து அறிகிறீர்கள். உடனே அதனை மொபைல் கேமரா மூலம் படம் பிடித்து வைத்துக் கொள்ளலாம்.
நன்றி தினமலர்.

மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்

மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்

உங்களுடைய மொபைல் போன் திருடப்பட்டால் நீங்கள் இழப்பது உங்கள் போன் மட்டுமல்ல அதன்பின் எடுத்தவர் பயன்படுத்தும் கால்களுக்கான கட்டணமும் தான். எனவே திருடு போனபின் லபோ திபோ என வருத்தப்படுவதைக் காட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாமே!

1. முதலில் உங்கள் போனை அடுத்தவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்டுவதனைத் தவிர்க்கவும். எப்போதும் உங்களுடனேயே போனை வைத்திருக்கவும். டேபிள் அல்லது தரையில் வைக்கவே கூடாது. கூட்டமான இடங்களில் சைலன்ட் மோடில் வைக்கவும். வைப்ரேசன் மட்டும் போதும். ரிங் டோன் அடித்து உங்களிடம் போன் இருப்பதனைக் காட்டிக் கொள்ள வேண்டாம்.

2. உங்கள் போனில் ""பின்'' Personal Identification Number (PIN)எண்ணைப் போட்டுப் பயன்படுத்தவும். மற்றவர்கள் பயன்படுத்துவது தவிர்க்கப் படும்.

3. உங்களுடைய போனில் உங்கள் இனிஷியல்களை லேசாக எழுதி வைக்கலாம்.

4. போனின் 15 இலக்க ஐ.எம்.இ.ஐ. எண்ணைத் International Mobile Equipment Identity (IMEI) number தெரிந்து அதனைப் பாதுகாப்பாக எங்காவது குறித்து வைக்கவும். போன் தொலைந்து அல்லது திருடப்பட்டால் இந்த எண்ணைக் கொண்டு போன் செயல்படுவதனை முடக்கலாம். இந்த எண்ணை அறிய நீங்கள் *#06# என்ற எண்ணை டயல் செய்திடவும். அதே போல் உங்கள் சிம் கார்டிலும் ஒரு எண் அச்சாகி இருக்கும். அதனையும் குறித்து வைக்கவும். போலீஸ் அல்லது உங்களுக்கு சேவை தரும் நிறுவனத்திடம் இந்த எண்களைத் தெரிவித்தால் அவர்கள் உடனே தடுப்பு நடவடிக்கை எடுப்பார்கள்.


கேமரா போன் பயன்படுத்தக் கூடாத இடங்கள்

1. மொபைல் போன் பேசுவதற்கே. எப் போதாவது தான் அதனைப் பயன்படுத்தி போட்டோ எடுக்கலாம். குளியல் அறை, ஆடை மாற்றும் அறைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றில் கேமரா பயன் படுத்தக் கூடாது.

2. சில தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகச் சூழ்நிலையில் போட்டோ எடுப்பது தடை செய்யப்பட்டிருக்கும். அங்கு படம் எடுக்கக் கூடாது. அதே போல மியூசியம், திரைப்பட அரங்குகள், நாடக அரங்குகளில் போட்டோ எடுக்கக் கூடாது.

3. தனி நபரை போட்டோ எடுக்கையில் அவர்களின் அனுமதி பெற வேண்டும். 16 வயதிற்குக் குறைந்தவராக இருந்தால் அவரின் பாதுகாவலர் அல்லது பெற்றோரின் அனுமதி பெற வேண்டும்.

4. மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துகையில் மொபைல் மூலம் போட்டோ எடுப்பது பெரும் விபத்திற்கு வழி வகுக்கும்.

பாதுகாப்பான பயன்பாடு

1. கார்களை ஓட்டுகையில் மொபைல் போனுடன் இணைந்த ஹேண்ட்ஸ் பிரீ சாதனங்களைப் பயன்படுத்தி பேச வேண்டும். கார்களை இயக்கத் தொடங்குமுன் இது இயங்குகிறதா என்பதனைச் சோதித்துக் கொள்ள வேண்டும்.

2. கட்டாயம் போனில் பேசித்தான் ஆக வேண்டும் என்றால் ஓரமாக நிறுத்திப் பேசவும். அப்போதும் நீங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றும் சாலை சூழ்நிலையைப் பொறுத்து பேசுவதை நிறுத்துவீர்கள் என்று முதலிலேயே தெரிவித்து விடவேண்டும். நிறுத்தும் இடம் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

3. உங்கள் மூடை மாற்றும் வகை யிலான பேச்சினத் தவிர்க்கவும். இரைந்து பேசுவது மிகவும் தவறு. இதனால் உங்களின் கவனமும் திரும்பும்.

4. கட்டாயம் ஸ்பீக்கர் மற்றும் மைக் வழியாக போன் பேசித்தான் ஆக வேண்டும் என்றால் எந்த நிலையிலும் சாலையில் இருந்து கண்களை எடுக்கக் கூடாது. நோட்ஸ் எடுப்பது, பிற எண்களை போனில் தேடுவது போன்ற சமாச்சாரம் எல்லாம் உங்களுக்கு விபத்தினை வரவழைக்கும் கதவுகளாகும்.
நன்றி தினமலர்

மொபைல் போன் சர்வீஸ் முக்கிய விதிமுறைகள்

மொபைல் போன் சர்வீஸ் முக்கிய விதிமுறைகள்

மொபைல் போன் வாடிக் கையாளர்களுக்கு சர்வீஸ் நிறுவனங்கள் எந்த விதிகளின் கீழ் அவற்றை வழங்க வேண்டும் என Telecom Regulatory Authority of Indiaஎன்ற அரசின் அமைப்பு விதித்துள்ள விதிமுறைகளில் சில.

1. குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் சேவையை வாடிக்கையாளர் ஒத்துக் கொண்ட பின் அதில் ஆறு மாதங்களுக்கு கட்டணம் உயர்த்தக் கூடாது.

2. இணைப்பு கொடுத்து ஒரு வாரத்திற்குள் சேவைக் கட்டணம் குறித்த முழுமையான தகவல்கள் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இதில் எந்தவகையிலாவது மாற்றம் இருப்பின் அது உடனே தெரிவிக்கப்பட வேண்டும்.


3. குறிப்பிட்ட கட்டணத் திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்திற்கு மாறினால் மாறுதலுக்கான கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது.

4. முன் கூட்டியே பணம் பெறும் ஆறு மாதங்களுக்கு மேலான (லைப் டைம் அல்லது வரையறை இல்லாத மதிப்பு உட்பட) காலம் கொண்ட எந்த திட்டத்திற்கும் கட்டணம் உயர்த்தப்படவே கூடாது.

5. பிரீ பெய்ட் மூலம் வாங்கப்பட்ட கார்டின் டாக் டைம் தீர்ந்து போனாலும் கார்டுக்கான காலம் முடியும் வரை பேசும் வசதி, கால்கள் பெறும் வசதி, எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை நிறுத்தக் கூடாது.

6. செக்யூரிட்டி டெபாசிட் பெறப்பட்டிருந்தால் வாடிக்கையாளர் திரும்ப கேட்கும் போது அவர் செலுத்த வேண்டிய கட்டணத்தைப் பிடித்துக் கொண்டு மீதியை 60 நாட்களுக்குள் திரும்ப நிறுவனம் தர வேண்டும். தரவில்லை என்றால் அடுத்து வரும் நாட்களுக்கு ஆண்டுக்கு 10% வட்டி தரப்பட வேண்டும்.

7. பிரீ பெய்ட் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட எல்லை தாண்டிச் செல்கையில் அழைப்பு ஏற்படுத்தினால் அல்லது பெற்றால் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். இது குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

8. வாடிக்கையாளர் தெளிவாக அறிந்து ஒப்புதல் கொடுத்தால் ஒழிய கூடுதல் சேவைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது.

Friday 3 October 2008

அறிஞர் அண்ணாதான் முதன்முதலில் . . .


"அறிஞர் அண்ணா" என்று அறியப்பட்ட, காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தரக் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.அவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார். பெரியாரின் சில நடவடிக்கைகள் காரணமாக எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். 1957 ஆம் ஆண்டு வரை தி.மு.க, ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாகவே இருந்துவந்தது. 1957 ல் நடைபெற்ற தேர்தலில் கலந்து கொள்ள முடிவு செய்த கழகம், அத்தேர்தலில் 15 இடங்களை வென்றபோது அண்ணாதுரையும் சட்ட சபை உறுப்பினரானார். தொடர்ந்து வந்த பத்தாண்டு காலத்தில், தமிழ் மக்களுக்குப் பாதகமானது என்று கருதப்பட்ட, மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியதன் மூலம், தி.மு.க வை ஒரு பலம் மிக்க அரசியல் இயக்கமாக வழி நடத்திச் சென்றார். இதன் காரணமாக 1967 ல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார்.
அறிஞர் அண்ணாதான் முதன்முதலில்
1. அண்ணாதான் முதன்முதலில் அரசியலில் ஈடுபட்டும் இலக்கியப் பணியைத் தொடர்ந்தவர்
.2, அரசியலில் இருந்துகொண்டே இலக்கியத்தில் சிறுகதை, நெடுங்கதை, சரித்திர நெடுங்கதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள், உரையாடல்கள், கடிதங்கள் என எல்லா பிரிவிலும் தனி முத்திரை பதித்தவர் - முதன்முதலில்
3. தமிழக இந்தி எதிர்ப்பு வரவாற்றின் முதல் சாவாதிகாரர் அண்ணாதான் - 1938-ல் இந்தியை எதிர்த்து சிறை சென்றவர்
.4. முதன்முதலில் தான் எழுதிய சந்திரோதயம் எனும் சமூக நாடகத்தில் தானே மூன்று வேடங்களில் நடித்து இயக்கி தன் பணிமனைத் தோழர்களையே நடிக்க வைத்தவர்.
5. 1943-ல் முதன்முதலில் தமிழில் பேச்சிலும் எழுத்திலும் அடுக்குமோழியைக் கையாண்டவர்.
6. ஓர் இரவு எனும் ஓர் இரவில் நடக்கும் நகிழ்ச்சிகளை அமைத்து ஒரு நாடகத்தை எழுதியவர் - முதன்முதலில் - 1945 ல்.
7. ஓர் இரவு நாடகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை பின்னோக்கிய காட்சிகளாக ((Flash Back) அமைத்தவர் - முதன்முதலில்
8. முதன்முதலில் வேலைக்காரி எனும் நாடகத்தில் வழக்கு மன்ற காட்சிகளை அமைத்தவர்.
9. தமிழகத்தில் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்த திரு.வி.கல்யாணசுந்தரனார், அண்ணாவை பாராட்டுகிறபோது இனி திரு.வி.க நடை என்பது மறைந்து அண்ணாத்துரை நடை என வழங்கும் எனப் பாராட்டினார் - முதன்முதலில் அந்தப் பெருமையைப் பெற்றவர் அண்ணா.
10. அண்ணாதான் முதன்முதலில் ’வேலைக்காரி’ திரைப்படத்தின் மூலம் புதுமைக் கருத்துக்களைச் சொன்னவர்.
11. சமகாலத்தில் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகர்சாமி போன்றவர்களுக்கு நிதி திரட்டித் தந்தவர், முதன்முதலில் அண்ணாதான் 1946-ல்
12. பாவலர்கள் மத்தியில் இருந்த தமிழை முதன்முதலில் பாமரர்களிடம் கொண்டு வந்தவர் அண்ணா.
13, முதன்முதலில் அண்ணாதான் ஓர் இரவு திரைப்படத்திற்கு ரூ. 20,000 ஊதியம் வாங்கியவர்.
14. கல்கி கிருட்டிணமூர்த்தி என்கின்ற சமகால எழுத்தாளர் முதன்முதலில் பாராட்டியது அண்ணாவைத்தான் - இதோ ஒரு பெர்னாட்சா, இதோ ஓர் இப்சன் என்று.
15. அண்ணாதான் முதன்முதலில், வானொலியில் பல தலைப்புகளில் பல நேரங்களில் சொற்பொழிவு ஆற்றியவர்.
16. அண்ணாதான் தமிழ்நாட்டில் முதன்முதலாக தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த சொற்பொழிவாளாராக விளங்கியவர்
17. கம்பராமாயணம், பெரிய புராணம் இவைகளை நன்கு கற்றுத்தேர்ந்து, புலவர்களும், தமிழறிஞர்களும் மறுக்க முடியாத வாதங்களை எடுத்து வைத்து வாதிட்டவர் - முதன்முதலில் ஒரு புதிய கோணத்தில் திறனாய்வு செய்தவர்.
18. அந்தத் திறனாய்வுக் கருத்துக்களை எளிய மக்களுக்கும் புரியவைக்கும் விதத்தில் நாடகமாக்கியவர் - நீதி தேவன் மயக்கம் எனும் பெயரில் - முதன்முதலில் அண்ணாதான்.
19. தான் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் ஈடுபடலாமா என்பதை முடிவெடுக்கக் கழக மாநாட்டில் வாக்குப்பெட்டி அமைத்து மக்களிடம் கருத்து கேட்டவர் முதன்முதலில்.
20. திறனாய்வு செய்கின்ற கோணத்தில், அண்ணாதான் முதன்முதலில் சில நாடகங்களை ஆக்கியவர். அவை, நீதி தேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், கட்டை விரல், இளங்கோவின் சபதம், பிடிசாம்பல், தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில் ஒமகுண்டம் ஆகிய புதினங்கள்.
21. சொற்பொழிவுகளைக் கட்டணம் செலுத்தி மக்கள் கேட்டது தமிழகத்தில் முதன்முதலில் - அண்ணாவின் சொற்பொழிவைத்தான்.
22. முதன்முதலில் தமிழில் பல புதிய சொற்களைச் சொல்லாக்கம் செய்தவர் அண்ணாதான்.
23. தன் தொண்டர்களை ’தம்பி’ என பாசமுடன் அழைத்தது அண்ணாதான். அதேபோல் தன் தலைவனை அண்ணனாகவே பாவித்து அண்ணா என்று தொண்டர் அழைத்தது - முதன்முதலில் இவரைத்தான்.
24. தன் கட்டுப்பாட்டிற்குள் கட்சி இருந்தபோதே தனக்கு அடுத்து இருந்தவரை, கட்சியின் பொதுச் செயலாளராக்கி தம்பி வா தலைமை ஏற்கவா என விளித்த முதல் அரசியல்வாதி.
25. சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவராக இருந்தபோது அன்றைய முதல்வரை தன் தொகுதிக்கு அழைத்து தன் தொகுதிமக்களுடன் நேருக்குநேர் சந்திக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் அண்ணாதான் - முதன்முதலில்
26. கட்சி மாநாடுகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி அறிவு விளக்கம் தந்தவர் அண்ணாதான் - முதன்முதலில்
27. அன்றாட வழக்கில், நடைமுறையில் இருந்த வடமொழிச் சொற்களை நீக்கி, தமிழ்ச் சொற்களை புகுத்தியவர் அண்ணாதான் - முதன்முதலில்.
28, இந்த நாட்டு மக்கள் விஞ்ஞானிகளுக்கும், மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும், அரசியல்வாதிகளுக்கல்ல எனச் சொன்ன முதல் அரசியல்வாதி அண்ணாதான்.
29. அரசியல் போராட்டத்தில் கைதாகி நீதிபதி முன் தனக்காகத் தானே வாதாடிய முதல் அரசியல்வாதி அண்ணாதான்.
30. திராவிடநாடு பிரிவினைப்பற்றி இந்தியத் துணைக்கண்ட பாராளுமன்றத்தில் முதன்முதலில் பேசிய தமிழர் அண்ணாதான்.
31. இன்றைய புதுக்கவிதையை முதன்முதலில் புதுப்பா என சொல்லாடல் செய்தவர்
32. அண்ணாதான் முதன்முதலில் ஆளுங்கட்சி காங்கிரசைப் பார்த்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக இன்னின்ன திட்டங்களை நிறைவேற்றுங்கள், நான் சார்ந்திருக்கிற திராவிட முன்னேற்றக் கழகம் 15 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாது என அறிவித்த அரசியல்வாதி.
33. அண்ணாதான் முதன்முதலில் தன் காலத்தில் பல துறைகளில் சிறப்புடன் வாழ்ந்தவரை அடைமொழியுடன் அழைத்தார் - அதவே பின்னாளில் நிலைபெற்றது. வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சித்தனைச்சிற்பி சிங்காரவேலர், உத்தமர் காந்தி, கொடுமுடி கோகிலம் (கே.பி.சுந்தராம்பாள்), நடிகமணி டி.வி.நாராயணசாமி, நடிப்பிசைப் புலவர் (கே.ஆர்.ராமசாமி)
34, அண்ணாவின் சிவாஜி கண்ட இநது ராஜ்யம் எனும் நாடகத்தில் முதன்முதலில் சிவாஜியாக நடித்த வி.சி.கனேசன் இன்றுவரை சிவாஜி என்றே அழைக்கப்படுகிறார்.
35. தன் தலைவர் பெரியாரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய அண்ணா, தான் தொடங்கிய கட்சிக்கு தலைவர் பெரியாரே, தலைவர் நாற்காலி இங்கு காலியாகத்தான் இருக்கும் என அறிவித்து அவ்வழியே நடந்து காட்டியவர் முதன்முதலில் அண்ணாதான்.
36. பெரியாரைப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கி 20 ஆண்டுகள் தலைவரைத் தாக்காமல் கட்சி நடத்தி அரசையும் கைப்பற்றிப் பகைமை மறந்து, தலைவரைப் பார்த்து இந்த ஆட்சி தங்களுக்கு காணிக்கை என அறிவித்த ஒரே மனிதர் - இவ்வுலகில் அண்ணா ஒருவர்தான் - முதன்முதலில்
37. அண்ணாதான் முதன்முதலில் பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து, சுவரொட்டிகளில் மனதில் பதியவைக்கும் கருத்துக்களைச் சுருங்கச்சொல்லிப் பிரச்சாரத்தில் புதிய யுத்தியைக் கையாண்டவர்.
38. முதல்வரான பிறகு இவர்தான் முதன்முதலில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் விழாவுக்கெல்லாம் அவர்களை பின்தொடராமல், தங்கள் பணியை செய்யலாம் என்று சுற்றறிக்கை அனுப்பியவர்.
39. முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய முதல் தமிழர்.
40. முதன்முதலில் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் எனும் சட்டத்தைச் செய்தவர் இவர்தான்.
41. ஆங்கிலம் தமிழ் போதும் - இந்தி வேண்டாம் என் இரு மொழி திட்டத்தைக் கொண்டு வந்தவர் அண்ணாதான் - முதன்முதலில்
42. எரியும் குடிசைகளை அகற்றி ஏழைகளுக்கு எரியா வீடுகளை கட்டிக் கொடுத்தவர் அண்ணாதான் - முதன்முதலில்
43. முதன்முதலில் தமிழ்நாட்டில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியவர், தமிழ்ப் போராளிகளுக்கு கடற்கரையில் சிலை நிறுவியவர்
44. முதன்முதலில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கியவர் ஏழைகளுக்கு.
45. முதன்முதலில் புன்செய் நிலங்களுக்கு வரியைத் தள்ளுபடி செய்தவர்.
46. அண்ணாதான் சீரணி என்ற அமைப்பை முதன்முதலில் தொடங்கினார். பொதுத்தொண்டில் ஆர்வமுள்ள எவரும் எந்த பலனும் எதிர்பாராமல் ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடிய சிறு சிறு பணிகளில் ஈடுபட்டு தங்கள் உழைப்பை நல்கும் திட்டமிது. நகர் கிராமப்புறம் இரண்டிலும் தன் உள்ளத்தை திறந்துக் காட்டி, எதையும் மறைக்காமல், இயலாததை இயலாது என்றும், தவறாயிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன், திருத்திக்கொள்கிறேன் என்றும் சொன்ன முதல் அரசியல்வாதி.
47. எனக்கென்று எந்தத் தனி ஆற்றலும் இல்லை. என் தம்பிமார்களின் ஆற்றலின் கூட்டுச் சக்தியின் உரிமையாளன் நான் - எனச் சொன்ன முதல் அரசியல்வாதி.
48. அமெரிக்க பல்கலைகழகமான யேல் பல்கலைக்கழகம் சப்பெலோசிப் எனும் சிறப்பை வழங்கியது அண்ணாவுக்குத்தான். அண்ணாதான் இந்த சிறப்பைப் பெற்ற முதல் தமிழர் - முதல் ஆசிரியர்.
49. உலகத்தில் வாழ்ந்த தலைவர்களின் மறைவின்போது, எவருக்கும் சேராத பெருங்கூட்டம் அண்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது - முதன்முதலில் - வரலாற்றில்.
50. அரசு அலுவலகங்களில் இருந்த கடவுள் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தவர்.
( டாக்டர் அண்ணா பரிமளம் )



HTML Hit Counters


Website Hit Counters

Thursday 2 October 2008

சொன்னாங்க..சொன்னாங்க..

இலங்கை தமிழர் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருப்பது, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதற்கான முயற்சி.
- ஆர்.சரத்குமார்

மது விற்பனையை நிறுத்தினால் கள்ளச்சாராயம் பெருகி விடும், வருமானம் போய்விடும் என் கிறீர்கள். பெண்களின் பாவத்தில் தான் வருமானம் ஈட்ட வேண்டுமா?
-பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

இலங்கைத் தமிழர் பிரச்னையில் மட்டுமல்ல, எந்தப் பிரச்னையிலும் தமிழக அரசு இதுவரை தூங்கியது இல்லை; இனியும் தூங்காது.
-கருணாநிதி


Website counter